ஈழத்தமிழர் பிரச்சனை, கூடங்குளம் அணு உலைஎதிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்த கட்டுரைகள் வெளியிடுவதாலும் விவாதங்களில் ஈடுபடுவதாலும் கீற்று இணையத்தளத்தின் ஆசிரியர் ரமேஸை தமிழக க்யூ பிராஞ் விசாரணைக்கு அழைத்துச் சென்றது. இரண்டு மணி நேர விசாரணையின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். ராஜபக்ச பாணியிலான ஊடக அடக்கு முறை தமிழ் நாட்டிலும் ஆரம்பித்துள்ளமைக்கான குறியீடாக இது கருதப்பட வேண்டும்.