
தவிர, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற பிரித்தானியாவை மையமாகக் கொண்ட அமைப்புக்கள் ராகுல் காந்தியைச் சந்தித்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனங்களின் பிடியில் ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்காலம் விற்பனை செய்யபடுவதாக ஈழப் பிரச்சனை குறித்து அக்கறை கொண்டோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்திய அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னரான புதிய வழிமுறைகளை பரிசீலிக்க மறுக்கும் இவ்வமைப்புக்கள் உளவுத்துறைகளிடம் தஞ்சமடைவது எதிர்காலத்தை மிகவும் சிக்கலானதாக மாற்றும்.