Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகில் படிப்பறிவில்லாத வயது வந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில்!

 
உலகில் படிப்பறிவில்லாத வயது வந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. கல்வி ஆய்வறிக்கை கூறுகிறது.

இருப்பினும் பள்ளியை விட்டு விலகுவோர் எண்ணிக்கையை குறைப்பதில் இந்தியா தீவிர முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, அனைவருக்கும் கல்வி – உலக கண்காணிப்பு அறிக்கை என்ற ஆய்வினை புதன்கிழமையன்று (ஜனவரி 20) வெளியிட்டது. உலகில் உள்ள 75.9 கோடி படிப்பறிவு இல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகின் படிப்பறிவு இல்லாதவர்களில் பாதிக்கு மேற்பட்ட வயது வந்தவர்கள் வங்கதேசம், சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் உள்ளனர். இவர்கள் மேம்பாடு அடைவதில் காணப்படும் மந்தம் வேதனை அளிப்பதாகவும், ஆயிரமாண்டு மேம் பாட்டு இலக்கினை அடைவதைத் தடுத்து நிற்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்போது 7.2 கோடி தொடக்கப்பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளும், 7.1 கோடி இளம் பருவத்தின ரும் பள்ளிக்குச் செல்வதில்லை.

இந்நிலை நீடித்தால் 2015ம் ஆண்டில் வளர்ச்சியையும் மீறி 5.6 கோடி சிறுவர்கள் பள்ளிக்கு செல்லமாட்டார்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அரசுகள் கல்விக்கு ஒதுக் கும் நிதியை குறைப்பதற்கு நிதி நெருக்கடியும் காரணமாக இருக்கலாம் என்று ஐ.நா. அமைப்பு அஞ்சுவதாக யுனெஸ்கோ உயர் அதிகாரி ஐரினா போகோவா கூறுகிறார்.

படிப்பறிவு இல்லாதவர்கள் ஏராளமானோர் இருந்தபோதும், இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. 1985 – 94ம் ஆண்டு காலகட்டத்தில் வயது வந்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் படிப்பறிவு உடையவர்களாக இருந்தனர்.

இது தற்போது மூன்றில் இரு பங்காக உயர்ந்துள்ளது. வயது வந்தவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதி கரித்துள்ள சூழலில் இது குறிப்பிடத்தக்கதாகும் என்று அறிக்கை கூறுகிறது.

பாலின வேறுபாடு புரையோடியுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த 28 நாடுகளில் ஒவ்வொரு 10 சிறுவர்களுக்கும் 9க்கும் குறைவான சிறுமிகளே பள்ளிக்குச் செல்கின்றனர். மொத்த படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பங்கு பெண்களாகும் என்றும் அறிக்கை சுட்டுகிறது.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி கல்வியிலும் பிரதிபலிக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 80 லட்சம் குறைந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டம் தொடங்கப்பட்ட 2001ம் ஆண்டு முதல் பள்ளி செல்லா சிறார்களின் எண் ணிக்கையில் 1.5 கோடி குறைந்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சர்வதேச நிதி நெருக்கடி கல்விக்கென்று அரசு ஒதுக்கும் நிதியை குறைக்கும் நிலையை ஏற்படுத்தும். அத்துடன் பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விலக்கிக் கொள்ளும் நிலைக்கு அல்லது பள்ளிக்கு அனுப்பாம லேயே இருக்கும் நிலைக்கு பெற்றோர்களை சர்வதேச நிதி நெருக்கடி தள்ளக் கூடும் என்று யுனெஸ்கோ நிர்வாக இயக்குநர் ஐரினா போகாவா அறிக்கையை வெளியிட்ட போது குறிப்பிட்டார்.

Exit mobile version