Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உலகின் வறிய நாடான இந்தியா நாளை செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது

உலகின் வறிய நாடுகளில் ஒன்றான இந்தியா தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணில் எவுகிறது.
இந்திய ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள முதற்செயற்கை கோள் இதுவாகும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625 கிலோ எடையுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பிரெஞ்‌ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியபெருங்கடல் பகுதியில் 2 ஆயிரம் நாட்டிகல் மைல் தூரம் அளவிற்கு கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இந்தியப்பெருங்கடல் மட்டுமல்லாது வங்ககடல் மற்றும் அரபிக்கடல் , மலாக்கா நீரீணை பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
இந்த செயற்கை கோளில் யு.எச்.எப், எஸ். கேயூமற்றும் சி வகை டிரசன்ஸ் பேண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கடற்படை மட்டுமல்லாது விமானப்படை தரைப்படை ஆகியவற்றிற்கும் பயன்மிக்கதாக அமையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version