Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உதயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் : வினாயகர் ஊர்வலத்திற்கு வந்த இந்துப் பயங்கரவாதி

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டுக் கொன்ற பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலத்தை தொடங்கி வைக்க இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் பரமக்குடி வந்தார்.
இந்து மத வெறியரான ராமகோபாலன் என்ற நச்சு மனிதன் ஊடகவியலாளர்களுக்கு நேர்காணல் வழங்கிய போது ‘கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மத்திய மாநில அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்ப்பவர்கள் தேச விரோதமானவர்கள். ஓட்டுக்காக இதை அரசிய லாக்குகிறார்கள். இதை எதிர்க்கும் உதயகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.’ என்று குறிப்பிட்டு தனது சாதிப் பயங்கரவாதத்தைக் கொட்டிக்கொண்டார்.
மக்கள் உயிர்வாழ்வதற்காகப் போராடுவதெல்லாம் இந்த மதவெறிபிடித்த பயங்கரவாதிகளுக்கு வேறு வகையாகத்தான் தென்படும்.

Exit mobile version