குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறைமை மிகவும் அவசியமானதுஎன ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கும்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன மிகவும்முக்கியமானவை என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாகஅமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில்உரையாற்றிய டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் விலி சொவான்டால் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாதநிலைமை ஆரோக்கியமானதல்ல எனவும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பல தலைமுறைகளுக்குநீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Clinton Admits US On Same Side As Al Qaeda To Destabilise Assad Governmen