ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் கீழ் ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புளொட், ஈ.பீ.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.