
இதிலே கலந்துகொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு 12ஆம் தேதி கூடுகின்ற “ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு” வெற்றிபெற சென்னையிலே திரண்டிடுவீர் என தி.மு.க.வின் கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் தலைவர் என்ற முறையில் உங்களையெல்லாம் அழைக்கின்றேன் என்று கனிமொழி கூறியுள்ளார்.
இதே வேளை, இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன் என்று அருந்ததி ராய் தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. காயத்தை ஆழப்படுத்தியவர்களே மருந்து குறித்துப் பேசுவது வேடிக்கையானது.