Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் உருவாகும் : சார்கோசியின் அக்கறை

ஈரான் மீதான அமரிக்கா தொடுக்க முனையும் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் நேரடியான பங்களிப்புடன் ஈரானை ஆக்கிரமிப்பைத் திட்டமிட்டு வந்த அமரிக்கா ஈரானின் இராணுவ மற்றும் மக்கள் ஆதரவுப் பலம் குறித்து கற்கை ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் போர் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்ப்டுகிறது. இதேவேளை ஒபாமா நிர்வாகம் அதிமுக்கிய இரகசியக் கடிதம் ஒன்றை ஈரானுக்கு அனுப்பிவைத்துள்ளதாக நியூ யோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. பராக் ஹூசைன் ஒபாமா கையெழுத்திட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோல சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி ஈரான் மீது இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருகிறது.
இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும் என்றார்.

மத்திய கிழக்கை ஆக்கிரமித்த பல்தேசியநிறுவனங்கள் மக்களின் எதிர்ப்புக் காரணமாகப் போதிய வழங்களைக் கொள்ளையிட முடியாத நிலையிலும் ஈரானின் மக்கள் மற்றும் இராணுவ பலமுமே நேட்டோவின் பின்வாங்கலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version