Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இஸ்லாமியத் தமிழர்களையும் காட்டிக்கொடுக்கும் ஈ.பி.டி.பி என்ற பயங்கரவாத அமைப்பு

Douglas_Mahindaபொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு இலங்கையில் நாசிகளின் பாணியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பர்மாவின் பௌத்த பயங்கரவாதிகளுடன் பொதுபல சேனா ஒப்பந்தம் எழுதிக்கொள்கிறது. உலகின் இன்னொரு மூலையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை வன்னிப் படுகொலைகளைப் போன்று திட்டமிடப்படுகிறது. இதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் இலங்கை அரச பயங்கரவாதிகளான கோத்தாபயவும் மகிந்தவும் என்பது வெளிப்படையானது. இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற பௌத்த மாநாட்டிற்கு இனக்கொலையாளி மகிந்த அனுப்பிய செய்தி பலரின் கவனத்தையும் பெற்றதாக ஈ.பி.டி.பி பாராட்டியுள்ளது.

’30 நாடுகளைச் சேர்ந்த பௌத்த மதத் தலைவர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றிய இம்மாநாட்டில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி பலரின் கவனத்தை ஈர்த்ததோடு பாராட்டையும் பெற்றது. உலக சமாதானம், சகவாழ்வு ஆகியவற்றை மேலும் பலமூட்டி செயற்படும் நோக்கில் இம்மாநாடு மூன்று நாட்களாக சீனாவில் பஓஜி நகரில் பாமன் விகாரையில் நடைபெற்றது.’என ஈ.பி.டி.பி மகிந்தவைப் பாராட்டி இணையச் செய்தியை வெளியிட்டுள்ளது.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் உரிமைக்காகப் போராடுவதாக மக்களை ஏமாற்றிவந்த டக்ளஸ் தேவாந்தா இன்று இஸ்லாமியர்களுக்கு எதிரான மகிந்த அரசின் சிங்கள பௌத்த பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.

பௌத்ததைப் பயங்கரவாதமாக்கிய மகிந்தவைப் புனிதப்படுத்தும் அரச துணைக்குழுவான ஈ.பி.டி.பி என்ற தமிழ்ப் பயங்கரவாத அமைப்பு இஸ்லாமியத் தமிழர்களையும் காட்டிக்கொடுக்கிறது.

Exit mobile version