
ஏனைய மூன்று வங்கிகளான பங்கோ பொப்பீயூலார், பங்கா சிவிக்கா, பங்கின்டர் ஆகியவற்றின் கடன் திறனை மூன்று மடங்காகக் குறைத்து கடன் திறன் மதிப்பீட்டு முகவர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவ தாராளவாத பொருளாதாரத்தின் பிரதான கூறுகளான வங்கி மற்றும் கடன் பொறிமுறை ஐரோப்பியப் பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
இவற்றின் மீது நம்பிக்கை ஏற்படுத்து வகையில் இஸ்பானிய அரசு கடந்த வாரங்களில் பல அறிக்கைகளை வெளியிட நிலையில் இந்தப் பின்னடைவும் மக்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதற்கான கடன் சுமையை மக்கள் மீது சுமத்தவே வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக பொருளாதார பேராசியர் டேவிட் கொமேஸ் தெரிவித்தார். ஐரோப்பிய வாழ்க்கைத் தரம் மூன்றாமுலக நாடுகளைவிடத் தாழ்ந்த நிலைக்குச் செல்லும் என அவர் மேலும் தெரிவித்தார்.