Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இளவரசனின் தந்தைக்குக் கொலை மிரட்டல்

ila1பா.ம.க.வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
வன்னியர் பெண் திவ்யாவை தலித் இளைஞர் இளவரசன் திருமணம் செய்த பிறகு வன்னிய சாதிவெறியர்களால் சாதிய வன்முறை தூண்டிவிடப்பட்டது, திவ்வியாவின் தந்தையையும் தற்கொலை செய்யும் அளவிற்கு புறத் தாக்கங்களை சாதி வெறியர்கள் ஏற்படுத்தினார்கள்.
இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று தெரியாத நிலையில் பெற்றோர்களும் உறவினர்களும் குழப்பமடைந்துள்ள நிலையில் பா.ம.க.வினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார். சந்துரு என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், இளவரசன் என்ன தியாகியா என குறிப்பிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் காரணமாக தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.
மிருகங்களை விடக் கேவலமான மனிதர்களின் கூடாரம் இந்திய அரச அதிகாரமும் அவர்களால் பாதுகாக்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சாதி வெறியர்களும். இன்று இளவரசன் இந்த அவமானத்திற்கு எதிராகப் போராடிய கதாநாயகன். இந்திய சமூகக் கட்டுமனமும் சாதி அமைப்பும் தகர்க்கப்படவேண்டும்.

Exit mobile version