Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை வெள்ள நிவாரணம் : 51 மில்லியன் டொலர் தேவை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளர் கதரின் பிறேக் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

வெள்ளத்தினால் 43 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன் 4 பேர் காணமல் போயுள்ளதாக அனர்ந்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் நாளை வெள்ளிக்கிழமை கதரின் பிறேக் திரும்பிச் செல்லவுள்ளார். _

Exit mobile version