Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை பிரச்சினை : போராட்டம் தொடரும் -கம்யூனிஸ்டு கட்சி

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

சென்னையில், இலங்கை தமிழர்களுக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், “கிளிநொச்சியை இலங்கை அரசு கைப்பற்றி விட்டதாக, ராணுவம் கூறுகிறது. அங்கு மக்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி என்றால், அங்கிருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனரா? அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் சி.மகேந்திரன், கே.பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version