Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தொடர்பான பிரேரணையை அமரிக்கா சமர்ப்பித்தது

HRCஇலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பான பிரேரணையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வாதவிவாதங்களின்போது இந்த பிரேரணை வரைபு மாற்றங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச சுயாதீன விசாரணைக்கு இந்த யோசனையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பேச்சு சுதந்திரம், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் அடக்குமுறை என்பன தொடர்பில் யோசனையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ராஜபக்சவை மிரட்டுவதும் அடிபணிய மறுத்தால் மற்றொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்துவதும் அமரிக்க அரசின் தந்திரோபாயம். லிபியா, ஈராக், தென் சுடான் போன்ற அனைத்து நாடுகளிலும் அமரிக்க அரசு இதனையே மேற்கொண்டது. ராஜபக்ச அரசிற்கு எதிராக மக்கள் போராடுவதும், உலகம் முழுவதும் போராடும் மக்கள் பிரிவுகளோடு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதுமே  இந்த ஏகபோகக் கும்பல்களை துரத்துவத்ற்கான ஒரே வழி.

Exit mobile version