Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தமிழர் பிரச்சினை : ரெயில் மறியல் போராட்டம்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி ரெயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

நிர்வாகிகள் கூட்டம்

புதிய நீதி கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது செயலாளர் கு.பா.பழனியப்பன், பொருளாளர் ஏ.வெள்ளைச்சாமி, இணை பொது செயலாளர் ஆர்.சுப்பையா, அமைப்பு செயலாளர் சேதுராமன், தலைமை நிலைய செயலாளர் ஏ.ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியல் போராட்டம்

கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரியும், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை தமிழர்களை பாதுகாத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் ஏ.சி.சண்முகம் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்று (புதன்கிழமை) வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரெயில் மறியல் போராட்டமும், வருகிற 3-ந் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டமும், 8-ந் தேதி புதுச்சேரி மாநிலத்திலும், 9-ந் தேதி சேலம் மாவட்டத்திலும், 10-ந் தேதி ஈரோடு மாவட்டத்திலும், 23-ந் தேதி விழுப்புரம் மாவட்டத்திலும், 26-ந் தேதி கோவை மாவட்டத்திலும், 28-ந் தேதி திருச்சி மாவட்டத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Exit mobile version