Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை ஜனாதிபதியின் மனைவிக்கு ஒரு கடிதம் : சந்தியா எக்னெலிகொட

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட தனது கணவர் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஒரு திறந்த மடலின் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

நிராயுதபாணி மனிதரொருவரை கொல்வதானது மிலேச்சத்தனமானதொரு செயலெனவும், அதனால் துயருருவது அவரது பிள்ளைகள் தானெனவும், மனிதரொருவரை காணாமல் போகச் செய்வது மிகக் குரூரமானதெனவும் அதனால் அவரது குழந்தைகள், மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரும் நிரந்தரமாக துயருர நேர்வதாகவும் முக்கியமாக பிள்ளைகளின் முழு எதிர்காலமுமே இருளாக்கப்படுவதாகவும் அவ்வாறான துயர் எந்தப் பிள்ளைக்கும் உரிமையாக்கப்படக் கூடாதெனத் தான் வேண்டிக் கொள்வதாகவும் சந்தியா எக்னெலிகொட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Exit mobile version