Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை சிங்கள பௌத்த நாடு, ஏனைய மதங்களுக்கு இடமில்லை : கோத்தாபயவின் மதவாதக் கும்பல்

bbs_gotaகோத்தாபயவின் வழிகாட்டலில் இயங்கும் பௌத்த அடிப்படைவாத பாசிச அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் தலைவர் வண கிரம விம­ல­ஜோதி என்ற பௌத்த துறவி இலங்கை சிங்கள பௌத்த நாடு பல்லின நாடல்ல எனத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு சிங்­கள நாடு. உலகில் வேறு சிங்­கள நாடுகள் இல்லை. முஸ்லிம்இ கிறிஸ்­தவக் குழுக்கள் சிங்­கள பெளத்­தர்­களின் ஏழ்­மையைப் பயன்­ப­டுத்தி மதம் மாற்றி வரு­வதாகக் குற்றம் சாட்டிய அவர் இந்தச் செயற்­பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இல்­லா­விடின் அவர்­களை ஓட ஓடத் துரத்­துவோம் என எச்சரித்த தேரர் முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்­பா­டு­களை முஸ்லிம் நாடு­க­ளுக்குச் சென்று மேற்­கொள்ள வேண்டும் எனவும் பெளத்த நாட்டில் இதற்கு இட­மில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இன்னொரு அழிவைத் திட்டமிடும் இந்த நச்சுக் கிருமிகள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும் அரசுக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்து அடிப்படைவாத பாசிசத்தை சிறுகச் சிறுக ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் திணிக்கும் புதிய வரவுகள் பொதுபல சேனாவைக் கண்டிப்பதில்லை. இவர்களுக்கும் பொதுபல சேனாவிற்கும் எழுதப்படாத உடன்படிக்கை உள்ளது போல் செயற்பாடுகள் வெளித்தெரிகின்றன. மத அடிப்படையிலான இரத்தக் களரியை இலங்கையில் ஏற்படுத்தும் புதிய திட்டங்கள் இவையா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்படுகிறது.

Exit mobile version