Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை உற்பத்திப்பொருட்களைத் நிராகரிப்போம்:Richard Dixon

சர்வதேச சட்ட அமைப்பு இலங்கை யுத்தக் குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் நிறுத்தத் தவறிவிட்டது. இப்போது சராசரி மனிதனுக்குரிய நேரம் வந்துவிட்டது. இலங்கை அரசு தனது ஒவ்வொரு குடிமகனையும் சமமாகவும் தன்மானத்துடன் வாழு வகையிலும் நடத்தும் வரை, இலங்கை அரசு மரண வலையத்துள் அப்பாவிகளைக் கொல்லுவதை நிறுத்தும் வரையிலும், மரண முகாம்களுக்குள் கடைசி மனிதன் விடுதலைசெய்யப்படும் வரையிலும், பாலியல் வல்லுறவு, கொலை, சித்திரவதை போன்றவற்றிற்கான பயமின்றி இலங்கை மக்கள் தமது வாழ்க்கையை நடாத்த ஆரம்பிக்கும் வரையிலும், இலங்கைக்கான விடுமுறை பயண ஏற்பாடுகளை நிராகரிக்கவும், சிறீலங்கன் எயர் லைனை நிராகரிக்கவும், இலங்கையில் வர்த்தக விருப்புள்ள எந்த அமைப்பையும் நிராகரிக்கவும், இலங்கைத் துடுப்பாட்டத்தை நிராகரிக்கவும், இலங்கைத் தேயிலையை நிராகரிக்கவும், உடைகளையோ அல்லது இலங்கையின் உற்பத்திப் பொருட்களையோ நிராகரிக்கவும், மனச்சாட்சியுள்ள எந்த வாடிக்கையாளருக்கும் நேரம் வந்துவிட்டது.
இலங்கை மண்ணுக்கு அனுப்பப்படும் பணம் மனிதர்களையும் குடும்பங்களையும், சமூகங்களையும் நிர்மூலமாக்கப் பயன்படுகிறது.

ரெலிகிராபில் வெளியான கட்டுரையில் முன் பகுதி இது. :

http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/07/12/the_time_of_judgement_has_arrived_to_the_land_of_terror

Exit mobile version