Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இளைஞர்கள் பற்றிய உண்மைச் சம்பவ திரைப்படம்:வெனீஸ்திரைப்பட விழாவில்!

31.08.2008.

வெனீஸ் நகரில் நடந்து வரும் திரைப்பட விழாவில் இவ்வாரக் கடைசியில் காண்பிக்கப்படுகின்ற ஒரு திரைப்படமான மச்சான், வெளிநாட்டு கூட்டுத் தயாரிப்பில் உருவான மிகச் சில இலங்கைத் திரைப்படங்களுள் ஒன்று.

ஜெர்மனியில் குடியேறவேண்டும் என்பகிற உண்மை உள்நோக்கத்துடன் இருக்க, ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவது என்ற போர்வையில் அந்நாட்டுக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் பற்றிய உண்மைச் சம்பவம்தான் இந்த படத்தின் கதை.

திரைப்படத் தயாரிப்பாளர் உபெர்டோ பசோலினியின் பார்வையில் பட்ட ஒரு செய்திக் குறிப்பு கொழும்பை மையமாகக் கொண்டு அவர் ‘மச்சானை’ உருவாக்க காரணமாக காரணமாக அமைந்தது.

இலங்கை இளைஞர்கள் பற்றிய இந்த சம்பவத்தில், நட்பு வாழ்க்கைப் போராட்டம் என பார்வையாளர்களை கட்டிப்போடக்கூடிய ஒரு நல்ல கதைக் கரு இருக்கிறது என்று பசோலினி உணர்ந்திருந்தார்.

தங்களுடைய தாய்நாட்டைத் துறந்து வெளிநாடு சென்று ஒரு மேம்பட்ட வருமானம் ஈட்டுகிற ஒரு வாழ்க்கையை இளைஞர்கள் தேடும் நிலைக்கு தள்ளப்படுவது குறித்த ஒரு பார்வையை இலங்கை தாண்டியும் இப்படம் ஏற்படுத்தும் என்று உபெர்டோ பசோலினியும் மஹேந்திர பெரேராவும் நம்புகிறார்கள்.

Exit mobile version