இந்தியாவினால் தலைமை தாங்கப்பட்ட ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மலேசியா ஆகியன இன்றைய இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டை விசாரணைக்குட்படுத்தும் அமர்வு கைவிடப்பட வேண்டும் என வாதாடின. இது ஏற்றுக்கொள்ளப்படாததால், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா, சீனா, எகிப்து ஆகிய நாடுகள் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்தன. ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைப் போல் இவ்வமர்வில்
எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.