Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் வன்முறையைத் தூண்டும் புலனாய்வுப் பிரிவு வன்முறைக்கு எதிfரான அறிக்கை

pothupalasenaநாட்டில் மீளவும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வர்த்தக மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடாத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 28ம் திகதி பெப்பிலியான பெஷன் பக் நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இவ்வாறு இன முறுகலைத் தூண்டும் வகையிலானது. இந்தத் தாக்குதலுக்கும் பொதுபல சேனா அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்ற முழக்கத்தின் கீழ் ராஜபக்ச குடும்ப ஆதரவோடு இலங்கை முழுவதும் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் பொதுபல சேனாவைக் காப்பாற்றும் புலனாய்வுப் பிரிவு நேற்று கிளினொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தைத் தாக்கியது. வன்முறையத் தூண்டுவது பேரினவாதிகளும் அதன் அனைத்து அடக்குமுறை இயந்திரங்களுமே.

Exit mobile version