
2011ம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் முன்னொரு போதும் இல்லாதவகையில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு,சுற்றுலாத்துறை, கலாச்சாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற துறைகளில் இந்தியாவிற்கும்இலங்கைக்கும் இடையில் கூடுதலான உறவு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வன்னி இனப்படுகொலைகளின் பின்புலத்தில் செயற்பட்ட இந்தியா அதிகார வர்க்கம், இலங்கையை இராணுவமயமாக்கவும் இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளவும் தனது ஆதரவை வழங்குகின்றது. இராணுவக் குடியிருப்புக்களுக்கு மத்தியில் தனது பல்தேசிய வியாபார நிறுவனங்களை நிறுவிக் கொள்கிறது.
இலங்கை இந்திய வர்த்தக விஸ்தரிப்பு என்பதன் பின்னணி இதுவே.