Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் அரச படைகள்; மருத்துவமனை மீது தாக்குதல்:45 பேர் பலி

இலங்கையின் வடக்கே மோதல் நடக்கும் பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் மீது இலங்கையின் அரச படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிவரும் தற்காலிக மருத்துவமனை மீது இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணி வாக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் இடம் பெற்ற தாக்குதலில் காயமடைந்து தங்கியிருந்தவர்களில் சிலரும் பலியாகியுள்ளதாகவும்அந்த மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version