
‘பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. இந்த தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழக மாணவ மாணவியர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் புதிய மாணவர்களை சேர்ப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது’ என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.