Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைப் பல்கலைகழக ஆசிரியர் போராடத்தை அவமானப்படுத்தும் அமைச்சர்

பல்கலைக் கழகக் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் இலங்கை அரசின் நோக்கத்திற்கு எதிராகப் போராடும் பல்கலைகழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவமானப்படுத்தியுள்ளார். போராடும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச தீர்வையும் முன்வைக்காமல் குறுகிய அரசியல் நோக்கம் என வர்ணித்துள்ளார்.
‘பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. இந்த தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழக மாணவ மாணவியர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் புதிய மாணவர்களை சேர்ப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது’ என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version