Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்குவதனை தடுக்க முடியாது : உச்ச நீதிமன்றம்

இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்குவதனை தடுக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பதனை தடை செய்யுமாறு கோரி புது டெல்லி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கும் விவகாரமானது வெளிவிவகாரக் கொள்கை அடிப்படையிலான தீர்மானம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகளில் தலையீடு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு கிடையாது என நீதவான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version