Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தேர்தல் : அரச ஊடகங்களின் பக்கச் சார்பு தன்மை

தேர்தலை நியாயமான முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை எனவும், இதனால் தாம் பதவி விலக உத்தேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பொதுச்செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களது பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையாளர் நடத்திய விசேட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்ததாக ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச ஊடகங்களின் பக்கச் சார்பு தன்மை தொடர்பில் கண்காணிப்பதற்கு தம்மால் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியை வாபஸ் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊடகங்கள் தேர்தல் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version