Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு செல்ல வீசா அனுமதி இல்லை : பீரிஸ்

இந்திய சீன அரசுகளின் அரசியல் நகர்வுக்க்குள் இயங்கும் இலங்கை அரச பயங்கரவாதம் மேற்கிற்கு எதிராக வெளிப்படையாகப் பேசும் நிலை உருவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக அன்னியத் தலையீடும் ஜீ.எஸ்.பி சலுகையும் தேவையற்றது என மகிந்த தெரிவித்த மறுநாளே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு செல்ல வீசா அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் மர்சுகி தருஸ்மன், தென்னாபிரிக்காவின் யேஸ்மின் சூகா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீபன் ரட்ணர் ஆகியோருக்கு இலங்கை வீசா அனுதியை வழங்காது. அவர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version