Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக்கு ஐ.நா. எச்சரிக்கை : பாலித கொஹொன

இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையின் பிரதியொன்றை இலங்கை அரசிடம் கையளித்த பிற்பாடு அது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது சம்பந்தமாக ஐ.நா.சபை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக நியுயோர்க்கிலுள்ள ஐ.நா.சபையின் இலங்கைக்கான பிரதிநிதி பாலித கொஹொன ப்ரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கை இலங்கையிடம் கையளிக்கப்பட்டதன் பிற்பாடு இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் இரண்டில் அதன் சாராம்சமானது பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவ்வறிக்கையானது ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்தே வெளிப்படுத்தப்பட்டிருக்குமென திரு.பாலித கொஹொன தெரிவித்திருந்தார். எனினும் ஒருபோதும் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்து அவ் அறிக்கை வெளியாகவில்லையென ஐ.நா.சபையின் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அரசு மூலமாக அவ் அறிக்கையானது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லையெனவும் அவ் அறிக்கையானது பகிரங்கப்படுத்தப்படுவதானது சம்பூரணமாகத் தவறானதொரு செயல் எனவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஊடகக் கலந்துரையாடலில் இது சம்பந்தமாகத் தெரிவித்திருந்தார்.

ஐ.நா. சபையின் அறிக்கையை பிரசித்தப்படுத்தினால் இலங்கையானது மீளப் புனரமைக்கப்பட முடியாத பாரதூரமானதோர் அழிவுக்குள்ளாகுமென அவ் ஊடகக் கலந்துரையாடலில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version