Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவ நடவடிக்கைகளின் மூலமே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் : வெளிவிவகார அமைச்சர்

இராணுவ நடவடிக்கைகளின் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, பிரித்தானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் மிலொச் பிரவுண் பிரவிடம் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ முன்நகர்வுகளின் மூலம் கிழக்கில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று வடக்கிலும் பயங்கரவாதத்தை யுத்தம் மூலம் இல்லாதொழித்து ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் அதன் மூலம் சாதாரண பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா

Exit mobile version