Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இராணுவத்தின் துணையோடு தொடரும் மர்மமனிதனின் பெண்கள் மீதான தாக்குதல்கள்

மர்ம மனிதன் இராணுவத்தின் துணையோடு நவாலி, கிளிநொச்சி பகுதிகளில் நேற்றும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் இலங்கை அரசு இனப்படுகொலையின் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விட்டுள்ள மர்ம மனிதர்கள் சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசங்களை அவலத்துள் வைத்திருப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இதனூடாக வட-கிழக்கை தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பிரதேசங்கள் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதையெ பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளனர். பேரினவாத பாசிச அரசின் கலாசாரத்தின் மீதான இத் தாக்குதல்கள் இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவமே.

Exit mobile version