Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்து மதவெறியத் துண்டும் பால் தாக்கரேயின் புதிய வாக்குமூலம்

இந்திய முஸ்லீம்கள் மீது எனக்கு எந்தவித பகைமை உணர்வும் இல்லை என்று சிவசேனா தலைவர், இந்துமத அடிப்படை வாதியும் பல முஸ்லிம்களின் கொலைக்குப் பின்னணியிலிருந்தவருமான பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா‘வில் இன்று வெளியாகியுள்ள பால் தாக்கரே பேட்டி வருமாறு,

தலைமுறை தலைமுறைகளாக இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் மீது எனக்கு எந்தவித பகைமையும் கிடையாது. அவர்கள் மீது நான் புகார் கூறவே மாட்டேன். வெளிநாடுகளில் இருந்து வந்து நம் நாட்டில் பிரச்சனை உருவாக்குபவர்களைத் தான் எதிர்க்கிறேன். அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் இங்குள்ள முஸ்லீம்களின் மனதை கெடுக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் பகுதிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு முஸ்லீம்கள், அங்குள்ள முஸ்லீ்களுக்கு தவறான பாதையைக் காட்டுகின்றனர் என்றார்.
இந்துவெறியைத் தூண்டி பல மதக் கலவரங்களை முன்னின்று நடத்திய சிவ சேனா வெளினாட்டு இந்துக்களின் பணத்தில் இயங்குகிறது என்பது அறியப்பட்டதே.

Exit mobile version