Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்துக்களின் கோரம் : பாடசாலைக்குச் சென்றதால் தாக்கப்பட்ட தலித் குழந்தைகள்.

Madurai_Dalit_villageபாட சாலைக்குக் கல்விகற்கச் சென்ற ஒரே காரணத்திற்காக மதுரையில் 8 வயதிற்கும் 13 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகளை உயர்சாதி இந்துக்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தலித் குழந்தைகள் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலித் குழந்தைகளைப் பாடசாலைக்கு அடிப்படைக் கல்விக்காக அனுப்புவதை விரும்பாத இந்த உயர் சாதி இந்துக்கள் ஏனைய தலித் பெற்றாருக்கும் எச்சரிக்கையாகவே இத் தாக்குதலைக் குழந்தைகள் மீது தொடுத்ததாக தாக்குதல் நடத்தும் போது கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெரும்பாலான சிறுவர்கள் பெண்களாவர். பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியிலேயே இக் காடைத்தனம் நிகழ்ந்துள்ளது. இது குறித்துப் பொலீசாருக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை குறிக்கத் தக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

Exit mobile version