Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய விசேட குழு இந்த வாரம் இலங்கை பயணம் : சிதம்பரம்

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தவாரம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் ப.சிதம்பரம் இன்று காலை தெரிவித்தார். ஜூலை 22ம் திகதி மன்மோகன் சிங் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இலனங்கைத் தமிழர் புனவாழ்வில் கருணாநிதியின் பங்களிப்பைப் பாராட்டும் முகமாகவே அவரைச் சந்தித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்திய மத்திய அரசு, கருணாநிதி, இலங்கை அரச கூட்டு நடவடிக்கையான வன்னிப் படுகொலைகளின் பின்னர் நேற்றுவரை தமிழ்ப் பேசும் மக்கள் தமது நிலங்களைவிட்டுத் துரத்தப்படுகின்றனர். நாளாந்தம் ஆக்கிரமிப்பும், கொலைகளும், சூறையாடல்களுமாக தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் சூறையாடுப்படுவதை மறைக்கும் நிகழ்ச்சிப்போக்காக நிவாரணம், புனர்வாழ்வு என்பன மாறியுள்ள நிலையில், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான கருணாநிதி – இந்திய அரச கூட்டு ஈழத் தமிழர் குறித்துப் பேசும் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.

Exit mobile version