Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய பயணம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக இந்தியா செல்லும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா எச்சரித்துள்ளது.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத குழுக்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கலாம் என பல்வேறு ஆதாரங்களிடம் இருந்து தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டினர் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம். இந்தத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதக் குழுக்கள் தயாராக உள்ளனர். பயங்கரவாத குழுக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.  ஹோட்டல், ரயில் நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கான இலக்குகள். பயணம் மேற்கொள்ளும் பொழுது மிக அதிகமான பாதுகாவல் ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்.  இவ்வாறு அமெரிக்க அரசின் எச்சரிக்கை கூறுகிறது.

Exit mobile version