இலங்கைக்கு எரிபொருள், அரிசி, சீனி, மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு லால்மஹல் நிறுவனத்திற்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கு தடையை ஏற்படுத்தி லால்மஹல் நிறுவனத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தொலைபேசி சேவை மற்றும் வடக்கின் ரயில்வே மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஏராளமான சேவைகள் ஆலோக் பிரசாத்தின் லால்மஹல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் இணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருநடேசன் என்பவரே செயற்பட்டுள்ளார்.
மேலும் பசில் ராஜபக்சவின் மகள் ஒருவர் இந்தியர் ஒருவரை மணம்முடித்து தற்போது இந்தியாவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் அலோக் பிரசாத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.