
இந்திய ராணுவ தளபதி விக்ரம்சிங், அடுத்த மாதம் இலங்கை செல்கிறார். அவருடைய பயண தேதியை இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேசி முடிவு செய்வார்கள். இந்தியா- இலங்கை ராணுவத்துக்கு இடையே ராணுவ உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்த சுற்றுப்பயணத்தின்போது முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் போராட்டத்தில் நம்பிக்கை அற்ற புலம் பெயர் அரசியல் தலைமைகள் இந்தியாவையோ அல்லது அந்த நாட்டின் வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகளையோ வால்பிடித்து காய் நகர்த்தி ஏதாவது சாதித்துவிடலாம் என்று முப்பது வருடம் நம்பியதைப் போன்று இன்னும் நம்பும் நிலையில் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.