Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அரசின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை செல்கிறார்

Pranab Mukherjeeஇந்திய அரசின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை செல்கிறார். சரத் பொன்சேகா இலங்கை அதிபர் மீதான போர்க்குற்றங்கள் குறித்து அமரிக்க அரச அமைபுக்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று கருதப்படும் சூழலில் இவர் இலங்கை செல்வதானது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கை ஆட்சியாளர்களின் மேலதிக பண உதவி தொடர்பாக ஏனைய நாடுகளை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ள பின்புலத்தில் நிதியமைச்சர் முகர்ஜியின் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
வன்னியில் இலங்கை இராணுவம் கடும் போரைக் கட்டவிழ்த்து விட்டிருந்த சூழலில் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவிவகார அமச்சராக பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருந்தார்.
அவ்வேளையில் பிரணாப் முகர்ஜி இலங்கையில் போர் நிறுத்தத்தைக் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காகவே சென்றிருந்தார் என த் தமிழ் நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://fromnowona.com

Exit mobile version