Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் மாம்பழம் பரிசு- இன்ப அதிர்ச்சி புதிய திருப்பம்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் விரும்பிய ரெவாரி ஸ்வீட்டை பாகிஸ்தான் பிரதமரும். பாகிஸ்தான் பிரதமருக்குப் பிடித்த அல்போன்சா மாம்பளத்தை இந்தியப் பிரதமரும் பரஸ்பரம் பரிமாறி புதிய திருப்பங்களை ஏற்படுத்தினாலும். பாகிஸ்தான் பிரதமர் அனுப்பிய ரெவாரி ஸ்வீட் கையில் கிடைக்கவில்லை என்று இந்தியா வருத்தப்பட்டதுமான பதிவு ஒன்றை நமது இனியொரு தளத்தில் வெளியிட்டிருந்தோம். https://inioru.com/?p=13396 இப்போது சார்க் மாநாட்​டிறாக இந்​தியா சார்​பில் பங்​கேற்​கச் சென்​றி​ருந்த இந்​திய குழு​வுக்கு தனது அன்​புப்​ப​ரி​சாக மாம்​ப​ழப் பெட்​டி​களை வழங்​கி​னார் பாகிஸ்​தான் உள்​துறை அமைச்​சர் ரஹ்​மான் மாலிக்.​ ​ மாலிக்​கின் திடீர் அன்​புப்​ப​ரிசு இந்​தி​யாவி​லி​ருந்து சென்ற குழு​வி​ன​ருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்​ப​டுத்​தி​யது.​ ​ வெளி​ற​வுத்​து​றைச் செய​லர் நிலை​யில் நடை​பெற்ற இரு தரப்பு பேச்​சு​வார்த்தை மற்​றும் சார்க் உள்​துறை அமைச்​சர்​கள் மாநாடு சார்ந்த செய்தி சேக​ரிக்க வந்​தி​ருந்த பத்​தி​ரிகை நிரு​பர்​க​ளுக்​கும் மாம்​ப​ழங்​களை வழங்​கி​னார் அமைச்​சர்.​ ​ இந்​திய தலை​வர்​கள்,​​ அதி​கா​ரி​கள்,​​ தூதர்​கள்,​​ பத்​தி​ரி​கை​யா​ளர்​கள் என 50க்கும் மேற்​பட்​டோ​ருக்கு மாம்​ப​ழப் பரிசு வழங்​கப்​பட்​டது.​ இந்​திய குழு​வி​னர்​க​ளில் சிலர் மாம்​ப​ழம் வாங்​கா​மலே திரும்​பி​விட்​ட​தாக தெரி​விக்​கப்​ப​டவே,​​ அவர்​க​ளுக்கு இந்​தி​யா​வி​லேயே வழங்க நட​வ​டிக்கை எடுக்​கும்​படி தனது அலு​வ​ல​கத்​துக்கு மாலிக் உத்​த​ர​விட்​டார்.​ அதன்​படி வாகா எல்​லை​யில் உள்ள அதி​கா​ரி​க​ளுக்கு இஸ்​லா​மா​பா​தில் உள்ள இந்​திய தூத​ரக அதி​கா​ரி​கள் மூல​மாக அனுப்​பி​வைக்​கப்​பட்டு அங்​கி​ருந்து தில்​லிக்​கொண்டு சென்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​க​ளுக்கு மாம்​ப​ழம் வழங்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்​டது.​ ​ மாம்​பழ அன்​ப​ளிப்பு என்​பது பாகிஸ்​தா​னுக்​கும் இந்​தி​யா​வுக்​கும் புதி​தல்ல.​ இரண்​டுமே அதில் அனு​ப​வப்​பட்​ட​வை​தான்.​ கடந்த மாதம் பூடா​னில் நடந்த சார்க் உச்சி மாநாட்​டில் பாகிஸ்​தான் பிர​த​மர் யூசுப் ரஸô கிலா​னியை சந்​தித்த பிறகு கிலா​னிக்கு அல்​போன்ஸô மாம்​ப​ழத்தை அன்​ப​ளிப்​பாக பிர​த​மர் மன்​மோ​கன் சிங் அனுப்பி வைத்​தார்.​ 1980களில் அப்​போ​தைய பிர​த​மர் இந்​திரா காந்​தி​யும் ராணுவ ஆட்​சி​யா​ளர் ஜியா உல் ஹக்​கும் மாம்​பழ அன்​ப​ளிப்​பு​களை பரி​மா​றிக் கொண்​டுள்​ள​னர்.​ ​ 2001ல் அப்​போ​தைய பிர​த​மர் வாஜ்​பா​யிக்கு மாம்​ப​ழத்தை அன்​புப் பரி​சாக அனுப்​பி​வைத்​தார் அதி​ப​ராக இருந்த பர்​வீஸ் முஷா​ரப். இப்படி மாமபழமும், அல்வாவும், ரெவாரி ஸ்வீட்டுமாக இந்திய, பாகிஸ்தான் ஆளும்வர்க்கங்களின் நாக்குகள் ருசிக்காக அலைகிற அதே நேரத்தில் இவர்களின் கோரப்பிடியில் காஷ்மீர் மக்கள் சிக்கி அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக எப்போதும் இல்லாத அளவுக்கு காஷ்மீரின் வன்முறை ஏற்பட்டதன் விளைவாய் செல்போன் சேவைகள் முற்றிலுமாக செயலிழக்கச் செய்யப்பட்டு பள்ளத்தாக்குப் பகுதியே இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version