Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா பாலைவனமாகி வருவதாக ஆய்வு கூறுகிறது!

இந்தியாவின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி, பாலைவனமாகிவருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காடுகள் அழிக்கப்படுவதும், ஆடுமாடுகள் அதிக அளவு மேய்ச்சல் செய்வதும் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

இந்தப் பிரச்சனையில் வட இந்தியாவும் மேற்கு இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை பெய்வதில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்தப் பிரச்சினை அதிகரிப்பதாகவும் கரன்ட் சயின்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Exit mobile version