Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடப்படும் அமெ. பயங்கரவாத எதிர்ப்பு நிதி புஷ் நடத்தும் திருகுதாளம்

வாஷிங்டன்,ஜூலை 25-

தலிபான், அல்கொய்தா வினரை எதிர்க்க பாகிஸ் தானில் பயன்படுத்த வேண் டிய பயங்கரவாத எதிர்ப்பு நிதியை பாகிஸ்தானின் விமானப்படையை நவீனப் படுத்துவதற்கு புஷ் திருப்பி விட்டார் என்று அமெரிக்க காங்கிரஸ் புஷ் மீது விமர் சனம் கூறியுள்ளது.

அமெரிக்கா காங்கிர சின் அரசு மற்றும் அயலு றவு நடவடிக்கை குழுவின் தலைவர் ஜனநாயகக் கட் சியைச் சேர்ந்த நிடா லூயி கடுமையான விமர்சனங் களை வைத்துள்ளார். சட் டம் ஒழுங்கை நிலைநாட் டவும் பயங்கரவாதத்தை எதிர்க்கவும் காங்கிரஸ் நிதி ஒதுக்குகிறது. அல்கொய்தா வையும், தலிபானையும் எதிர்த்து போராட எப் 16 விமானங்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை அயல்துறையும் பாகிஸ் தானும் விளக்க வேண்டும். இந்திய விமானப் படையை எதிர்கொள்ளவேண்டிய எப் 16 விமானங்களைப் பலப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு நிதி திருப்பிவிடப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப் புக்கு 30 கோடி டாலர் ஒதுக்கப்பட்டது. அதில் 23 கோடி எப் 16 விமானங் களை நவீனப்படுத்தப்படு வதற்காக லாக் ஹீட் நிறு வனத்திற்கு திருப்பிவிடப் பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்ற நிபந் தனையுடன் கடந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கப்பட்டது. ஆப்கனில் மட்டுமல்லாது இந்தியாவிலும் நடத்தப் படும் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பின்பலமாக உள்ளது.

பயங்கரவாதக் குழுக் களை பாகிஸ்தான் அடக் காவிட்டால் அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து பாகிஸ்தானுக்குள் நுழை யும் என்று ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் கூறினர். அமெ ரிக்கா இதுவரை இதுபற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், லாக் ஹீட் நிறுவனத்துக்கு பணம் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பயங்கரவாதத்தை ஒடுக்க அளிக்கப்பட்ட நிதியை பாகிஸ்தானும் அமெரிக் காவும் எப் 16 விமானங் களை நவீனப்படுத்தத் திருப் பிவிட்ட தகவல் வெளி வந் திருக்காது.

Exit mobile version