Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆளும்கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுக்களுக்கு அரசாங்க அமைச்சர்களே தலைவர்கள்!!!

26.09.2008.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் இலங்கை ஆளுங்கட்சிக்கு ரகசிய உடன்பாடு இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு, மிக் ரக விமானங்களின் கொள்வனவு குறித்த ஒரு சர்ச்சை மற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு எதிரான சில குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து விசாரிக்கு முகமாக மூன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் டபுள்யூ.ஜே.எம். லொகுபண்டார நியமித்துள்ளார்.

இவற்றில் மிக் விமான விவகாரம் குறித்து ஆராயும் குழுவுக்கு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரிய தர்ஸன யாப்பவும், விடுதலைப்புலிகளுடனான, ஆளுங்கட்சியின் உடன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவுக்கு அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவும், இறைவரி திணைக்கள விவகாரம் குறித்த விசாரணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கபீர் ஹசீம் அவர்களும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதலிரண்டு விவகாரங்களில் குற்றச்சாட்டுக்கள் ஆளும்கட்சிக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றை விசாரிக்கும் குழுக்களுக்கு அரசாங்க அமைச்சர்களே தலைவர்களாக நியமிக்கப்பட்டதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்துள்ளது.

Exit mobile version