Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுதம் கடத்திய புலிகளைக் கைது செய்யக்கோரியுள்ளது- இண்டர்போல்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆயுதங்களை வெளிநாடுகளில் வாங்கி அனுப்பி வைத்தவர்களுமான பொன்னையா ஆனந்தராஜா, சிவராச பிருந்தாவன் அச்சுதன் என்ற இருவரைக் கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச போலீஸôர் சிவப்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இவ்விருவரையும் ஆயுதம் கடத்துகிறவர்கள் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதில் ஆனந்தராஜா அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அச்சுதன் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர். அச்சுதன் இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பதாகக் கருதப்படுகிறது. ஐரோப்பாவிலிருந்துகொண்டு செயல்படும் நரேந்திரன், தென்கிழக்கு ஆசியாவிலிருந்து செயல்படும் பவீந்திரன், ரூபன் ஆகியோரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version