Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மனம்.. அ‌ச்சுறு‌த்த முடியாது, தொடர்ந்து போராடுவோம்!: சீமா‌ன்

தமிழகப் பொலீசார் சீமானைத் தேடிவரும் நிலையில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  சீமானின் அறிக்கை:

தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து நான் பேசிய பேச்சுக்காக, என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு துளியும் கவலைப்படவில்லை. ஆனால் நான் பேசிய பேச்சுக்கள், சிங்களவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கூறி என்னை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம், எண்ணற்ற மீனவர்களின் உயிருக்கு சிறு அசைவை‌க் கூட தெரிவிக்க மறுக்கிறது.

இன விடியலுக்கான பணியை செய்தே தீருவோம். அடக்குமுறை சட்டங்களால் எங்களை அச்சுறுத்த முடியாது. இதற்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்.

என் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

Exit mobile version