Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அல்லா வாழும் நாட்டிற்குச் செலவும் : சிங்கள பௌத்த பாசிஸ்ட்

omalpe theroஹலால் தேவையென்றால் அல்லாஹ் உள்ள நாட்டுக்குச் செல்லவும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி வைத்தாலோ, பெண்கள் பர்தா அணிந்தாலோ அதில் தவறில்லை, எனினும், எங்களுக்கும் தொப்பியும் பர்தாவும் அணிவிக்க முயற்சித்தால் அதனை ஏற்க முடியாது.
இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது இனப்படுகொலை வடிவிலான இன வன்முறை ஒன்றைக் கட்டவிழ்த்துவிட மகிந்த ராஜபக்ச அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் பௌத்தத்தின் பெயரால் விதைக்க ஆரம்பித்துவிட்டனர்.
தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்காக கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு முன்னெடுப்பது அவசியமானதாகும்.
பௌத்தசிங்கள பாசிஸ்டான துறவி மேலும் தெரிவிக்கையில்:
முஸ்லிம்கள் தலைக்கு தொப்பி வைத்தாலோ, பெண்கள் பர்தா அணிந்தாலோ அதில் தவறில்லை, எனினும், எங்களுக்கும் தொப்பியும் பர்தாவும் அணிவிக்க முயற்சித்தால் அதனை ஏற்க முடியாது

Exit mobile version