பீகார் மாநிலம் மூங்கர் மாவட்டத்திலுள்ள அரசு கட்டடம் ஒன்றை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்துவிட்டதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. கரக்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தி்றகு அருகே இருந்து அக்கட்டடத்தை வெடி பொருட்களுடன் வந்த 55 தீவிரவாதிகள் நேற்று இரவு குண்டு வைத்து தகர்த்ததாக கூறிய காவல் துறையினர், அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.