இந்த துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரித்த குழுவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, தற்போது சேவையில் உள்ள 5 ஆயர்களில் ரோமன் கத்தோலிக்க லைம்றிக் ஆயரான டொனால் முரேயும் ஒருவர்.
சிறாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு பயன்படுத்தியதாக ஒரு பாதிரியார் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க இவர் தவறிவிட்டார்.
இந்தக் குற்றம் ”மன்னிக்க முடியாதது” என்று அந்த விசாரணைக் குழு கூறுகிறது.
லைம்றிக்கில் செண்ட் ஜோண்ஸ் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் தனது இராஜினாமாவை அறிவித்த ஆயர், சிறாராக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அனைவரிடமும் தான் தாழ்மையுடன் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார்.
இந்த ஆயரின் இராஜினாமாவை பாப்பரசர் ஏற்றுக்கொண்டதாக வத்திக்கான் திருச்சபை கூறியுள்ளது.