Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க அரசு டெல்லி மாணவிக்கு வீரமங்கை விருது : அரசியல் பண்டமாக்கப்பட்டார்

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்க அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது.
அழிந்துகொண்டிருக்கும் அமரிக்க சாம்ராஜ்யம் இப்போது ஆசிய நாடுகளைக் குறிவைக்கிறது. நாடுகளின் கலாச்சார அரசியல் கூறுகளிலும் அமரிக்க அரசு நேரடித் தலையீட்டை மேற்கொள்கிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமாவும் வழங்கினார்கள்.
ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பெண்கள் நிலப்பிரபுத்துவ அடிமைகளாக முடக்கிவைக்கப்படும் அதேவேளை அமரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் பண்டங்களாக விற்பனை செய்யப்படுகிறார்கள்.

Exit mobile version