Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க அரசு சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக 53 வீதமான அமரிக்கர்கள் கருதுகின்றனர்

us-imperialismஅண்மயில் நடைத்தப்பட்ட பியூ ஆராச்சி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் அமரிக்க மத்திய அரசு தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாக 53 வீதமான மக்கள் கருதுவதாத் தெரியவந்துள்ளது. அமரிக்க அரசு தமது சொந்தத தனிப்பட்ட உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக 53 வீதமான அமரிக்கர்கள் கருதுவதாக அறிவிக்கும் இக் கருத்துக்கணிப்பு அமரிக்கா உள்நாட்டிலும் தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அதிகரித்து வருவதை காட்டுகின்றது.
உலகம் முழுவது ஜனநாகத்திற்கும் மனித குலத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்துவந்த அமரிக்க அரசு உள் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சமூக நல அரசு என்ற அடிப்படையின் கீழ் பேணிவந்தது.
இதனால் மக்களை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த அமரிக்க ஐரோப்பிய அரசுகள், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கான வழிமுறையாக சமூக நலத்திட்டங்களை அழித்தலை முன்வைக்கின்றன.
இதற்கு எதிரான எழுச்சிகளை ஒடுக்கும் முதல் திட்டமாக போலிஸ் அரசுகளாக உள்ளக பாசிசத்தை முன்வைக்கின்றன.
அமரிக்க சாமான்யர்களின் கருத்து இதனைத் தெளிவுபடுத்துகின்றது.

Exit mobile version