
நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை ஒன்றின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாக அன்றாடம் தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி, தகவல் செய்திகள், அழைத்தவர் இருப்பிடங்கள் உட்பட ஆயிரக்கணக்கான தகவல்களை அரசாங்கத்திற்குக் கொடுக்கின்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான AT&T ஒவ்வொரு நாளும் 700க்கும் மேற்பட்ட அரசாங்க கோரிக்கைகளுக்கு விடையளிக்கிறது; அதே நேரத்தில் மற்றொரு முக்கியக் கைத்தொலைபேசி நிறுவனமான Sprint தான் சராசரியாகக் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் 1,500 அரசாங்கக் கோரிக்கைகளைப் பெற்றதாகத் தகவல் கொடுத்துள்ளது.
தொலைபேசி ஒட்டுக்கேட்டல் உட்பட இதுவரைக்கும் 1.3 மில்லியன் உளவு நடவடிக்கைகளை அமரிக்க அரசு தொலைபேசிகள் ஊடாக மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமரிக்க அரசு எதிர்ப்பு இயக்கங்களையும் போராட்டங்களையும் எதிப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதையே இது காட்டுகிறதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
சர்வாதிகார அரசாங்கங்கள் என அமரிக்க அரசு பிரச்சாரம் செய்யும் எந்த நாட்டிலும் இந்த அளவிற்கு தொலைபேசி ஒட்டுக்கேட்பு நிகழவில்லை.